Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க
இயேசுவை நோக்கி

இயேசுவை நோக்கி

இயேசு படகிலிருந்த பேதுருவை "வா" என்று அழைத்தபோது அவன் படகையும், கடலையும், காற்றையும், அலைகளையும், சக பயணிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாமல், படகை விட்டிறங்கி தன்னை அழைத்த ஆண்டவரைநோக்கித் "தண்ணீரின்மேல் நடந்தான்." சூழ்நிலையைப் பார்த்தவுடன் மூழ்கத் தொடங்கினான். நம் வாழ்க்கையில் சில காரியங்களில், சில நேரங்களில், இயேசுவை நோக்கிப்பார்த்து நேராய் நடக்கிறோம். ஆனால், சூழ்நிலைகளால் மேற்கொள்ளப்பட்டு நாம் மூழ்குகிற தருணங்களே ஏராளம். அவர் "வா" என்று சொன்னபின் தயங்காமல் நடக்க ஆரம்பிக்க வேண்டும். நடக்க ஆரம்பித்தபின், உண்மையிலேயே அவர் வரச் சொன்னாரா என்று சந்தேகித்தால், "ஏன் சந்தேகப்பட்டாய்?" (மத். 14:31) என்பதே ஆண்டவருடைய கேள்வியாக இருக்கும். தன்னையும் தனக்குரிய எல்லாவற்றையும் தயங்காமல் பலிபீடத்தில் கிடத்துவதற்கு ஆயத்தமாயிருக்கிறவன் இயேசுவை நோக்கிப்பார்க்கவும், அவருடைய குரலைத் தெளிவாகக் கேட்கவும், முடியும். அப்போது அவன் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் பணயம் வைத்து துணிவோடு தடைகளைத் தாண்டி நடப்பான்.

5 மார்ச் 2025
மெர்லின் இராஜேந்திரம்

மெர்லின் இராஜேந்திரம்

ஒரு சிறிய கைகாட்டி

எழுத்தின் வழியே எழும் சில அதிர்வலைகள்...

அதிர்வலைகள்